பின்னர் 12ஆம் நூற்றாண்டில் தெய்வச் சேக்கிழார் அருளிச் செய்த 'பெரிய புராணம்' எனும் 'திருத்தொண்டர் புராணம்' 12ஆம் திருமுறையாகச் சேர்க்கப் பெறுகின்றது.
இப்பன்னிரு திருமுறைகளையும் அருளிச் செய்தோர் மொத்தம் 27 அருளாளர்கள், 27 நட்சத்திரங்களைப் போன்று சைவ வானில் ஒளிர்பவர்கள்.
1, 2, 3 திருமுறைகள் (தேவாரம்):
திருஞானசம்பந்தர் அருளியவை.4, 5, 6 திருமுறைகள் (தேவாரம்):
நாவுக்கரசு சுவாமிகள் (அப்பர் அடிகள்) அருளியவை.7ஆம் திருமுறை (தேவாரம்):
சுந்தரமூர்த்தி நாயனார் அருளியது.8ஆம் திருமுறை (திருவாசகம், திருக்கோவையார்):
மாணிக்கவாசகர் அருளியவை.9ஆம் திருமுறை (திருவிசைப்பா, திருப்பல்லாண்டு):
இதன் திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளோர் மொத்தம் 9 அருளாளர்கள்.1.திருமாளிகைத் தேவர்
2.சேந்தனார்
3.கருவூர்த்தேவர்
4.பூந்துருத்தி நம்பி
5.கண்டராதித்தர்
6.வேணாட்டடிகள்
7.திருவாலியமுதனார்
8.புருடோத்தம நம்பி
9.சேதிராயர்
இவற்றுள் திருப்பல்லாண்டினைச் சேந்தனாரின் திருப்பாடல்களும், 'திருவிசைப்பா' எனும் தொகுப்பில் சேந்தனார் உள்ளிட்ட 9 ஆசிரியர்களின் திருப்பாடல்களும் இடம்பெறுகின்றன.
10ஆம் திருமுறை (திருமந்திரம்):
திருமூலர் அருளியது.11ஆம் திருமுறை (பொதுப் பாடல்களின் தொகுப்பு):
இதனை அருளிச் செய்துள்ளார் மொத்தம் 12 ஆசிரியர்கள்.1. திருஆலவாய் உடையார்
2. காரைக்கால் அம்மையார்
3. ஐயடிகள் காடவர்கோன்
4. சேரமான் பெருமாள்
5. நக்கீரதேவர்
6. கல்லாடதேவர்
7. கபிலதேவர்
8. பரணதேவர்
9. இளம்பெருமான் அடிகள்
10. அதிரா அடிகள்
11. பட்டினத்துப் பிள்ளையார்
12. நம்பியாண்டார் நம்பிகள்
12ஆம் திருமுறை (பெரிய புராணம்):
சேக்கிழார் பெருமான் அருளியது.திருமுறை ஆசிரியர்களின் பாராயணத் துதி:
திருஞானசம்பந்தர் வாகீசர் சுந்தரர்
திருவாதவூரர் மற்றைத்
திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூரர்
தெள்ளுபூந்துருத்தி நம்பி
வருஞான கண்டராதித்தர் வேணாட்டடிகள்
வாய்ந்த திருவாலியமுதர்
மருவு புருடோத்தமர் சேதிராயர் மூலர்
மன்னு திருஆலவாயர்
ஒரு காரைக்காலம்மை ஐயடிகள் சேரமான்
ஒளிர்கீரர் கல்லாடனார்
ஒண் கபிலர் பரணர் மெய்உணர் இளம்பெருமானோடு
ஓங்கும் அதிராஅடிகளார்
திருமேவு பட்டினத்(து) அடிகளொடு
நம்பியாண்டார் நம்பி சேக்கிழாரும்
சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டு அருள்செய்த
தெய்விகத் தன்மையோரே.